For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இளம்பெண் விவகாரம்: ஹோட்டல் சரவண பவன் அதிபர் தலைமறைவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தன்னை 3வது திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண்ணை மிரட்டி.ய ஹோட்டல் சரவணபவன் அதிபர்தலைமறைவாகிவிட்டார். இவரைப் பிடிக்க சிறப்புப் போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவர் மீது மிரட்டல் புகார் கொடுத்த பெண்ணையும் அவரது கணவரையும் காணவில்லை. இவர்கள் உயிருக்குஅஞ்சி தலைமறைவாகிவிட்டதாகத் தெரிகிறது.

சென்னையில் பிரபலமான ஹோட்டல் சரவணபவன். பல இடங்களில் இதற்குக் கிளைகள் உள்ளன. இந்தஹோட்டல்களை நடத்தி வருபர் ராஜகோபால்.

இவர் மீது ஜீவஜோதி என்ற இளம் பெண் போலீசில் புகார் கொடுத்தார். இவர் ஏற்கனவே திருமணமானவர். இவரதுகணவர் பெயர் பிரின்ஸ் சாந்தகுமார்.

ஜீவஜோதி போலீசில் கொடுத்த புகாரில், கணவரை விரட்டி விட்டுவிட்டு தன்னிடம் வந்துவிடுமாறு சரவண பவன்அதிபர் ராஜகோபால் என்னை மிரட்டி வருகிறார். என்னை மூன்றாவது திருமணம் செய்து கொள்வதாகவும்கூறுகிறார் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து போலீசார் சரவணபவன் ஊழியர்கள் 5 பேரைக் கைது செய்தனர். ஆனால், ராஜகோபால்தலைமறைவாகிவிட்டார். இவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர். எனவே, தூத்துக்குடியிலும் இவரைத் போலீசார்தேடுகின்றனர்.

இந் நிலையில் புகார் கொடுத்த ஜீவஜோதியையும் அவரது கணவர் பிரின்சையும் காணவில்லை. இவர்கள் உயிருக்குஅஞ்சி தலைமறைவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X