பாகிஸ்தான் டிவியை புறக்கணித்த காஷ்மீர் மக்கள்
லேஹ்:
ஆப்கானிஸ்தானில் அடி மேல் அடி வாங்கி தலிபான்கள் தப்பியோடியதை அடுத்து, காஷ்மீர் மக்கள் பாகிஸ்தான்டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதைத் தவிர்த்து வருகின்றனர்.
தினமும் இதுபோன்று 15 முதல் 20 டெலிபோன் அழைப்புகள் வருகின்றன என்று ஒரு கேபிள் ஆப்பரேட்டர்கூறினார்.
காஷ்மீரில் உள்ள முஸ்லீம் பெண்கள் புர்கா அணியாமல் வெளியே நடமாடக் கூடாது, பாகிஸ்தான் டி.வியைத்தவிர வேறு எந்த டி.வியையும் பார்க்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல எச்சரிக்கைகளை ஹர்கத்-உல்-முஜாகிதீன்மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகமது போன்ற தீவிரவாத அமைப்புகள் விடுத்திருந்தன.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களிடம் பயிற்சி பெற்றுத்தான் இத் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவிஇதுபோன்ற மிரட்டல்களை விடுத்திருந்தனர்.
ஆனால் தற்போது ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பெரும் தோல்வியைச் சந்தித்து, ஓடிக் கொண்டிருப்பதால்,காஷ்மீர் மக்கள் மிகவும் தெளிவடைந்து விட்டனர். பயம் விலகி அவர்கள் பாகிஸ்தான் டி.வி நிகழ்ச்சிகளைப்பார்ப்பதைத் தவிர்த்து வருகின்றனர்.