ஜெ.வுடன் புதுவை அதிமுகவினர் ஆலோசனை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி அரசியலில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என்று பாண்டிச்சேரி மாநில அதிமுக செயலாளர் நடராஜன்கூறினார்.
இதுகுறித்து இன்று (புதன்கிழமை) பாண்டிச்சேரியில் நிருபர்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
பாண்டிச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த ஆதரவை அதிமுக வாபஸ் பெற்றுவிட்டது.ஆனால் எங்கள் கட்சியைச் சேர்ந்த ராமச்சந்திரன் தொடர்ந்து சபாநாயகராக இருந்து வருகிறார். ராமச்சந்திரன் தனதுசபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் கேட்கப்பட்டால், அதுகுறித்துமுடிவெடுக்கப்படும்.
சட்டசபையில் இன்று முதல்வர் ரங்கசாமியின் அரசுக்கு உள்ள பெரும்பான்மை பலத்தை நிருபிக்க வாக்கெடுப்புநடத்தப்பட்டது. ஆனால் துணை சபாநாயகருக்கான தேர்தல் நடத்தப்படாதது, வியப்பையும் அதிர்ச்சியையும்அளிக்கிறது.
பாண்டிச்சேரியில் நடக்கும் அரசியல் மாற்றங்கள் குறித்து நாங்கள் எங்கள் தலைவி ஜெயலலிதாவிடம் தொடர்ந்துஆலோசித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications