நாளை மறுநாள் பொது வேலை நிறுத்தம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை:
போக்குவரத்துத் தொழிலாளர்கள் வரும் வெள்ளிக்கிழமை பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்திருப்பதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
20 சதவீத போனஸ் கேட்டு கடந்த 12 நாட்களாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில்ஈடுபட்டுள்ளனர். கடந்த 3 நாட்களாக அவர்களுடைய குடும்பத்தினரும் உண்ணாவிரதப் போராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகஅனைத்துத் தொழிற்சங்கங்களும் அறிவித்துள்ளன. இதற்கு அரசு ஊழியர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.பல அரசியல் கட்சிகளும் இந்தப் பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவளிக்கின்றன.
இதற்கிடையே பொது வேலை நிறுத்தத்தை முறியடிக்கவும், அப்போது அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டுவிடாமல்தடுக்கவும் தமிழக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும்ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக டி.ஜி.பியான பி.பி. நெய்ல்வால்தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications