பீகார் ரயில் விபத்தில் 13 பேர் பலி
லாக்கிசராய்:
பீகாரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு ஒரு ரயில் என்ஜின் மற்றொரு பயணிகள் ரயில் மீது நேருக்கு நேர்மோதியதில் 13 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
அந்த ரயிலை இழுத்துச் செல்வதற்காக பக்கத்தில் உள்ள ரயில் நிலையத்திலிருந்து ஒரு என்ஜின்கொண்டுவரப்பட்டது.
வெகு வேகமாகப் புறப்பட்டு வந்த அந்த ரயில் என்ஜின், நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது பயங்கரமாகமோதியதில் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டு கவிழ்ந்தன.
இதனால் அந்த இரண்டு பெட்டிகளும் நொறுங்கியதால், அதில் சிக்கிக் கொண்ட 13 பயணிகள் உடல் நசுங்கிஇறந்தனர். ஆனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25க்கும் மேல் இருக்கும் என்று அதிகாரப்பூர்வமற்றதகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடக்கின்றன. ரயில்வே அமைச்சர் நிதீஷ்குமார் மற்றும் உயரதிகாரிகள்உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டனர்.
இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications