கூவத்தை சுத்தப்படுத்த ரூ. 1,700 கோடியில் திட்டம்
சென்னை:
சென்னையையே நாறடித்துக் கொண்டு ஓடும் கூவம் நதி என்ற சாக்கடையைச் சுத்தப்படுத்த ரூ.1,700 கோடியில்புதிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இது குறித்து சுற்றுச் சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.திருநாவுக்கரசு திருநாவுக்கரசுகூறியதாவது:
சென்னையில் ஓடும் கூவம் மற்றும் பக்கிங்காம் கால்வாய்களில் கழிவு நீர்தான் ஓடுகிறது. இவற்றைச் சுத்தப்படுத்தரூ.1,700 கோடியில் புதியத் திட்டத்தை தமிழக அரசு தயாரித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் ஓடும் காவிரி, வைகை, பாலாறு உள்ளிட்ட ஆறுகளும், ஊட்டி,கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களும சுத்தப்படுத்தப்படும்.
சுற்றுச் சூழல் 2005 என்ற புதிய மாசுக்கட்டுப்பாட்டுத் திட்டத்தின் மூலம், 2005ல் தமிழகத்தில் உள்ள அனைத்துஆறுகள் மற்றும் நீர் நிலைகள் சுத்தப்படுத்தப்பட்டு, தூய்மையான நீர் கிடைக்க வழிவகைகள் காணப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.