For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பஸ் ஊழியர்களின் குடும்பத்தினர் 3வது நாளாக உண்ணாவிரதம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

போக்குவரத்துக் கழக ஊழியர்களின் குடும்பத்தினர் இன்று (புதன்கிழமை) 3வது நாளாக உண்ணாவிரதம்இருந்தனர்.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்று கோரி போக்குவரத்துக்கழக ஊழியர்கள் கடந்த 12 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை முதல் இவ்வூழியர்களின் குடும்பத்தினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.மூன்றாவது நாளாக இன்றும் தமிழகம் முழுவதும் பஸ் ஊழியர்களின் குடும்பத்தினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

சென்னையில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

இதற்கிடையே நாளை மறுநாள் (நவ. 23) தமிழகத்தில் பொது வேலை நிறுத்தம் நடைபெறும் என்றும்போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதற்கு அரசு ஊழியர் சங்கங்களும் சில கட்சிகளும்ஆதரவு தெரிவித்துள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X