"நக்கீரன்" நிருபரைத் தேடக் கோரி ஜனாதிபதி, பிரதமருக்கு கோபால் தந்தி
சென்னை:
நேற்று (செவ்வாய்க்கிழமை) கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ள "நக்கீரன்" பத்திரிகை நிருபர்சிவசுப்பிரமணியத்தை உடனடியாகத் தேட உத்தரவிட வேண்டும் என்று கோரி ஜனாதிபதி, பிரதமர்,தமிழக-கர்நாடக முதல்வர்கள் ஆகியோருக்கு அப்பத்திரிகையின் ஆசிரியர் கோபால் தந்தி அனுப்பியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே விநாயகபுரதிலுள்ள தன்னுடைய வீட்டை விட்டு நேற்று காலை 09.00 மணிக்குவெளியேறிய சிவசுப்பிரமணியம் மாலையில் வீடு திரும்பவில்லை என்றும் அவருடைய செல்போன் வேலைசெய்யவில்லை என்றும் கூறி ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் அவருடைய மனைவி ஜெயந்தி புகார் செய்திருந்தார்.
சிவசுப்பிரமணியத்தை சிலர் காரில் கடத்திக் கொண்டு போனதாக அவருடைய வீட்டுக்கு அருகிலிருக்கும் சிலகடைக்காரர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி, அவரைத் தேடி வருகின்றனர்.
சந்தனக் கடத்தல் வீரப்பனை முதன் முதலாகக் காட்டுக்குள் சென்று பேட்டி எடுத்தவர் சிவசுப்பிரமணியன்தான். இவர்பல முறை வீரப்பனிடம் பேட்டி எடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டபோது, அவரை விடுவிப்பதற்காக நியமிக்கப்பட்டபேச்சுவார்த்தைக் குழுவில் சிவசுப்பிரமணியனும் இருந்தார்.
பேச்சுவார்த்தைக் குழுவில் அவர் இருந்ததால்தான் அவரை யாரோ கடத்தியுள்ளனர் என்று கருதிய "நக்கீரன்"கோபால் ஜனாதிபதி கே.ஆர். நாராயணனுக்கும் பிரதமர் வாஜ்பாய்க்கும் தந்தி அனுப்ப முடிவு செய்தார்.
அதன்படி, சிவசுப்பிரமணியத்தை உடனடியாகக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரும்தந்தியை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கு இன்று காலை கோபால் அனுப்பினார்.
தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும் கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கும் தந்தி அனுப்பியுள்ளார்கோபால்.
மேலும், தமிழக-கர்நாடக தலைமைச் செயலாளர்களுக்கும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் தந்திகள்அனுப்பப்பட்டுள்ளதாகவும் கோபால் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications