காஷ்மீரில் ஊடுருவிய 12 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு:
காஷ்மீர் மாநில எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுறுவ முயன்ற 12 தீவிரவாதிளை எல்லைப் பாதுகாப்புப்படையினர் சுட்டுக் கொன்றனர்.
அப்போது அவர்களை எல்லைப் பாதுகாப்புப்படையினர் எச்சரித்தும் கேட்காமல் அவர்கள் தொடர்ந்து நுழையமுயன்றார்கள். இதனால் அவர்கள் அனைவரையும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
கொல்லப்பட்டவர்களிடம் இருந்து பாகிஸ்தான் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் சில பேப்பர்கள் பறிமுதல்செய்யப்பட்டன.
இதற்கிடையில் எல்லையின் மற்ற பகுதிகளில் பாகிஸ்தானியப் படையினர் இந்திய எல்லைப் பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். பதிலுக்கு நமது படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
58 கிலோ ஆர்.டி.எக்ஸ். பறிமுதல்
காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது நமது ராணுவத்தினர் நடத்திய திடீர் சோதனையில் 2 முகாம்கள்அடித்து நொறுக்கப்பட்டு, அங்கிருந்த ஆயுதங்கள் மற்றும் 58 கிலோ எடையுள்ள ஆர்.டி.எக்ஸ் வெடிபொருட்கள்பறிமுதல் செய்யப்பட்டன.
ராணுவத்தினர் நேற்று டெஹர்காம் மாவட்டத்திலுள்ள லோன் லேரி மற்றும் அனந்நாக் மாவட்டத்திலுள்ளஹல்சிதார் ஆகிய இடங்களில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்களில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கிருந்த 30 கிலோ எடையுள்ள ஆர்.டி.எக்ஸ். வெடிபொருட்கள், 28 ராக்கெட்டுகள், 44 கையெறிகுண்டுகள், 3 வெடிகுண்டுகள் மற்றும் ஏராளமான ஆயுதங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
இதோபோல குப்வாரா மாவட்டத்திலுள்ள சத்வாரா காட்டுப்பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில், அங்கிருந் 28கிலோ ஆர்.டி.எக்ஸ், 12 டைம் பாம்கள், 5 ஏ.கே. ரகத் துப்பாக்கிகள் மற்றும் பல ஆயுதங்களும் பறிமுதல்செய்யப்பட்டன.
இந்தச் சோதனையின் போது நடந்த சண்டையில் ஹர்கத்-உல்-ஜிகாத்-இ-இஸ்லாமி என்ற தீவிரவாத இயக்கத்தைச்சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர்.