For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கையில் போலீஸ் சுட்டதில் 4 தமிழர்கள் பலி

By Staff
Google Oneindia Tamil News

மட்டக்களப்பு:

இலங்கை மட்டக்களப்பு அருகே போலீஸ்காரர் ஒருவர் கண்மூடித்தனமாக திடீரென்று துப்பாக்கியால் சுட்டதில்11வயது சிறுவன் உள்பட 4 தமிழர்கள் பலியாயினர்.

மட்டக்களப்பிலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ள எறாவூரில், நண்பரைப் பார்ப்பதற்காக ஒரு வழக்கறிஞர் காரில்வந்துள்ளார்.

ஆனால் அந்தக் காரைப் பார்த்து போலீசார் சந்தேகமடைந்தனர். இங்குள்ள ஒரு போலீஸ் முகாமைத் தாக்குவதற்காகவிடுதலைப் புலிகளால்தான் அந்தக் கார் அனுப்பப்பட்டுள்ளது என்று கருதிய போலீசார், அக்காரை நோக்கிசராமாரியாகத் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.

ஆனால் குண்டுகள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களின் மீது பாய்ந்தன. இதில் சுரேஷ் என்ற 11 வயதுசிறுவனும் அவனுடைய தந்தை, தாயும் குண்டுகள் பாய்ந்து இறந்தனர்.

மேலும் 60 வயது முதியவரான சின்னத்தம்பி செல்லத்தம்பி என்பவரும் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியானார்.

இவர்களைத் தவிர குமாரசாமி சசிகுமார் (22), சின்னத்தம்பி காளியம்மா (40), கதிர்காமத்தம்பி மாலா (16),செல்லத்தம்பி செல்வி (20) ஆகியோர் உள்பட எட்டு பேர் குண்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X