பஸ், மின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு ஆலோசனை
சென்னை:
தமிழக அரசின் நிதிநிலையை சீர்செய்வதற்கு பஸ் கட்டணம், மின் கட்டணம் போன்றவற்றை உயர்த்தலாம் என்றுநேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறையைச் சரிசெய்வதற்கு என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம் என்றுசென்னையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
முதலைமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்கள்வருமாறு,
மின்கட்டணம், பஸ் கட்டணம், பால் விலை, சாலை வரி போன்றவற்றை அதிகப்படுத்தலாம் என்று அனைத்துஅமைச்சர்களும் கூறினார்கள். ஆனால் இதற்குச் சில அமைச்சர்கள் இந்த விலை உயர்வால் அரசின் மீதுகெட்டபெயர் ஏற்படும அதனால் பால் விலை, மின் கட்டணம் போன்றவற்றை உயர்த்தக் கூடாது என்று கூறியதாகக்கூறப்படுகிறது.
அப்போது நிதியமைச்சரும் மற்றவர்களும் பஸ் கட்டணம் சாலை வரி என்று எதை உயர்த்தினாலும் மக்கள் தவறாகத்தான் நினைப்பார்கள். ஆனால் நிதிநிலைமை மிகவும் மோசமாக உள்ளதே என்ன செய்ய என்று கேட்டார்களாம்.
மேலும் விவசாயிகளுக்கு கரும்பு விலையைக் குறைக்கலாம் என்று சொன்ன போது முதல்வர் பன்னீர்செல்வம்குறிக்கிட்டு, ஏற்கனவே தற்போதைய விலை போதாதென்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.இந்நிலையில் மேலும் கரும்பின் விலையைக் குறைத்தால் சரியாக இருக்காது என்று கூறிவிட்டாராம்.
இந்த விவாதங்கள் அனைத்தையும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரியப்படுத்திவிட்டு, அவர் எடுக்கும்முடிவின்படி செயல்படலாம் என்று அனைத்து அமைச்சர்களும் முடிவுசெய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால் மின் கட்டணம், பஸ் கட்டணம், பால் விலை ஆகியவற்றை உயர்த்துவது குறித்து கூட்டத்தில் எந்தஇறுதிமுடிவும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications