பஸ் ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை நோட்டீஸ்
சென்னை:
பணிக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஏன் பணிக்குவரவில்லை என்று கேட்டு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நைனார்நாகேந்திரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (புதன்கிழமை) நிருபர்களிடம் கூறியதாவது:
"சட்டவிரோதமாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள உங்களை ஏன் பணியிலிருந்து நீக்கக் கூடாது?" என்று கேட்டு, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஸ்டிரைக் நடந்து கொண்டிருந்தாலும் கூட போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை. தினசரி ரூ.4 கோடிஅளவுக்கு டிக்கெட் வசூல் உள்ளது. வழக்கத்தை விட 2 கோடி ரூபாய்தான் குறைவாக வந்து கொண்டுள்ளது.
85 சதவீத பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்கால் பெரிய அளவில்பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. ஊழியர்கள் நடத்தத் திட்டமிட்டுள்ள முழு அடைப்பு பிசுபிசுத்துப் போய் விடும்என்றார் அவர்.












Click it and Unblock the Notifications