கிரிக்கெட் வீரர்களுக்குத் தண்டனை: உதவ முடியாத நிலையில் ஐ.சி.சி.
மும்பை:
இந்திய கிரிக்கெட் வீரர்களின் செயல்கள் வருத்தமளிக்கின்றன என்றாலும், அவர்களுக்கு அளிக்கப்பட்டதண்டனையில் எங்களால் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைவர்மால்கம் ஸ்பீட் கூறினார்.
இந்திய வீரர்களுக்காக கொடுக்கப்பட்ட தண்டமையை மாற்றினால், அப்புறம் கிரிக்கெட் விதிமுறைகள் எல்லாம்எதற்கு என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
டால்மியா கோரிக்கை:
இந்தியக் கிரிக்கெட் வீரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனைகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றுஇந்திய கிரிக்கெட் போர்டு தலைவர் ஜக்மோகன் டால்மியா கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர்கூறியதாவது:
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்தத் தண்டனை கிரிக்கெட் உலகத்தைச் சேர்ந்தஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்தத் தண்டனை குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
மேலும் இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையே நடைபெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்துநடுவர் மைக் டென்னசைத் தூக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட வீரர்கள் என்னுடன் டெலிபோனில் தொடர்பு கொண்டு இதுகுறித்து பேசினர். அவர்கள் இந்தியாதிரும்பியதும் மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் டால்மியா.
இந்தியா கொதிப்பு:
தண்டனை குறித்து டிவியில் விமர்சனம் செய்த இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் நவ்ஜோத்சிங்சித்து, நடுவர் மைக் டென்னசை "கொலையாளி" என்று வர்ணனை செய்தார்.
இந்திய கிரிக்கெட் போர்டு முன்னாள் தலைவர் பிந்த்ரா, "தண்டனை அளிப்பதில் ஐ.சி.சி. இரட்டை நிலையைக்கடைப்பிடிக்கிறது. இதைக் கடுமையாகக் கண்டிக்கிறோம்" என்றார்.
டெண்டுல்கருக்கு ஸ்டீவ் வாஹ் எதிர்ப்பு:
பந்தை சுரண்டி சேதப்படுத்திய குற்றத்திற்காக சச்சின் டெண்டுல்கர் கட்டாயம் தண்டனையை அனுபவிக்க வேண்டும்என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவ் வாஹ் கூறியுள்ளார்.
தவறு செய்தவர்கள் கட்டாயம் தண்டனை பெற வேண்டும். கிரிக்கெட்டில் அவ்வப்போது தவறு செய்பவர்கள்தண்டிக்கப்பட்டுக் கொண்டுதான் உள்ளனர். இவர்களுக்கு மட்டும் அத் தண்டனையை நீக்கக் கோருவது சரியல்லஎன்றார் வாஹ்.