For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இனி ஆர்.டி.எக்ஸ். வைத்திருந்தால் மரணதண்டனை

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

அனுமதியில்லாமல் ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்து வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் வகையில்வெடி மருந்து சட்டத்தை மத்திய அரசு திருத்தியுள்ளது.

சர்வதேச அளவில் பயங்கரவாதம் அதிகரித்து வரும் நிலையில் தீவிரவாதிகள் வழக்கமாக பயன்படுத்தும்ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்துக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இனி யாராவது அனுமதியில்லாமல் ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்து வைத்திருந்தால் அவர்களுக்கு மரண தண்டனைவழங்கும் வகையில் வழக்குகள் தொடரப்படும். இதுவரை அதிகபட்சமாக 10 ஆண்டு சிறை தண்டனை தான்விதிக்கப்பட்டு வந்தது.

இப்போது திருத்தப்பட்டுள்ள சட்டத்தின்படி பென்ட் எரித்ரிடோல் டெட்ரா நைட்ரேட் அல்லது பி.ஈ.டி.என்.போன்ற ஆர்.டி.எக்ஸ். ரகத்தைச் சேர்ந்த வெடி மருந்தை வைத்திருந்தால், கடும் வழக்குகள் தொடரப்படும்.

குறைந்தபட்சம் ஆயுள்தண்டனையும் அதிகபட்சமாக மரணதண்டனையும் வழங்கப்படும் என மத்திய உள்துறைஇணையமைச்சர் வித்யாசாகர் ராவ் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X