புதுவை: பெரும்பான்மையை நிரூபித்தார் ரங்கசாமி
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் என். ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவை இன்று (புதன்கிழமை) பெரும்பான்மையைநிரூபித்தது.
இன்று காலை சட்டசபை கூடியவுடன், பெரும்பான்மையை நிரூபிக்குமாறு சபாநாயகர் டி. ராமச்சந்திரனுக்குஅழைப்பு விடுத்தார்.
இதையடுத்து, கை தூக்குதல் மூலம் ஓட்டெடுப்பு நடந்தது. ரங்கசாமிக்கு ஆதரவான 19 எம்.எல்.ஏக்கள் தங்கள்கைகளைத் தூக்கி ஆதரவைத் தெரிவித்தனர்.
இதையடுத்து முதல்வர் ரங்கசாமி தன்னுடைய பெரும்பான்மையை நிரூபித்து விட்டார்.
இந்த ஓட்டெடுப்புக்குப் பின்னர் பாண்டிச்சேரி சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications