ஸ்டிரைக்கில் ஈடுபட்ட பஸ் ஊழியர்கள் சஸ்பெண்ட்
சென்னை:
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
கடந்த 12 நாட்களாக வேலை நிறுத்தத்தில் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து ஒன்பது நாட்களுக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கைஎடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் ஏற்கனவே கூறியிருந்தார்.
அதன்படி தற்போது முதற்கட்டமாக திருச்சியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துக் கழகஊழியர்கள் மீது அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது.
பணிக்கு வராத 110 அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும் 600 பேர் மீதுஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை அரசுப் போக்குவரத்துக் கழக திருச்சி கோட்ட நிர்வாக இயக்குநர் தண்டபாணி கூறியுள்ளார்.
மேலும், தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு தற்காலிகப்பணி நீக்கம் தொடர்பான உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.












Click it and Unblock the Notifications