புஷ் தலைக்கு 50 மில்லியன் டாலர்: தலிபான்கள்
ஸ்பின் போல்டாக்:
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சைப் பிடித்துக் கொடுத்தால், 50 மில்லியன் டாலர்கள் பரிசாக வழங்கப்படும் என்றுதலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே தலிபான்கள் இவ்வாறு அறிவித்துள்ளனர். மேலும், 25 மில்லியன் டாலர்பரிசு அறிவிக்கப்பட்டதாலேயே பின் லேடன் பிடிபட்டுவிட மாட்டார் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
எங்கள் நாடு ஏழை நாடுதான் என்றாலும், புஷ்சைப் பிடித்துக் கொடுத்தால், ஏதோ எங்களால் முடிந்த 50 மில்லியன்டாலர்களைப் பரிசாகத் தருவோம் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் நடந்த தாக்குதல்களுக்கும் பின் லேடனுக்கும் சம்பந்தமே இல்லை.அவருக்கு அந்த அளவு வசதி-வாய்ப்பு இருந்திருக்கவில்லை என்றும் தலிபான்கள் கூறினர்.
முஸ்லீம்களின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே யூத கிறிஸ்தவர்கள் இத்தாக்குதலைநடத்திவிட்டு, பின் லேடன் மீது பழியைப் போட்டுள்ளனர் என்று தலிபான் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அன்றைய தினம் உலக வர்த்தக மையத்தில் பணிபுரியும் 4000 யூத கிறிஸ்தவர்கள் வேலைக்குப் போகவில்லை.இதிலிருந்தே அவர்கள்தான் இச்சம்பவத்திற்குக் காரணம் என்பது தெளிவாகத் தெரிகிறது என்றும் அவர் கூறினார்.
"பின் லேடன் எங்கே என்று எங்களுக்குத் தெரியாது"
பின் லேடன் தற்போது எங்கே இருக்கிறார் என்பதும் எங்களுக்குத் தெரியாது என்றும் ஹக்கானி கூறினார்.
அவருக்கும் எங்களுக்கும் இப்போது எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானின் தெற்கு நகரமாக ஸ்பின் போல்டாக்கில் 50 நிமிடங்கள் வரை நிருபர்களுக்குப் பேட்டியளித்தார்ஹக்கானி.












Click it and Unblock the Notifications