காங்கிரசில் இணைய வாழப்பாடி ராமமூர்த்தி முடிவு
சென்னை:
தன்னுடைய தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சியைக் கலைத்து விட்டு, காங்கிரசுடன் இணைய அக்கட்சித் தலைவர்வாழப்பாடி ராமமூர்த்தி முடிவு செய்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரசிலிருந்து பிரிந்து வந்து, தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார்வாழப்பாடி ராமமூர்த்தி.
திமுக, அதிமுக என்று பல்வேறு கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி அமைத்தும் குறிப்பிடத்தக்க வெற்றிகளைஇக்கட்சியால் பெற முடியவில்லை.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே அவர் மீண்டும் காங்கிரசில் சேரப் போகிறார் என்று செய்திகள்அடிபட்டன. காங்கிரஸ் தலைவர்களும் மீண்டும் மீண்டும் அவருக்கு அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தனர்.
சில நாட்களுக்கு முன் டெல்லி சென்று சோனியா காந்தியையும் சந்தித்து விட்டு வந்தார் வாழப்பாடி. சமீபத்தில்வாழப்பாடி வீட்டுக்கு திடீர் விசிட் செய்த தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும், அவரை மீண்டும்காங்கிரசில் சேருமாறு கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டம்நடந்தது. காங்கிரசில் மீண்டும் ஐக்கியமாவது குறித்து அப்போது அவர் உறுப்பினர்களுடன் விவாதித்தார்.கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள் காங்கிரசில் இணைவதற்குச் சம்மதம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று மாவட்ட நிர்வாகிகளை தனித்தனியாக அழைத்து வாழப்பாடி பேசினார். அவர்களுடன் பேசியபிறகு தமிழக ராஜீவ் காங்கிரசை தாய்க்கட்சியான காங்கிரசில் இணைக்க முடிவு செய்துவிட்டார் வாழப்பாடி.
அடுத்த டிசம்பர் மாத இறுதியில் பேரணி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வரும் சோனியா காந்திமுன்னிலையில் காங்கிரஸ்-தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சிகளின் இணைப்பு விழா நடைபெறும் என்றும் வாழப்பாடிராமமூர்த்தி கூறினார்.