For Daily Alerts
Just In
காஷ்மீர் சட்டசபை குண்டு வெடிப்பு - ஒருவர் கைது
ஸ்ரீநகர்:
கடந்த அக்டோபர் 1ம் தேதி காஷ்மீர் சட்டசபை வளாகத்தில் தற்கொலைப் படையினர் நடத்திய கார் குண்டுத்தாக்குதல் தொடர்பாக, நேற்று (புதன்கிழமை) ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இவருடைய வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த வெடி குண்டுகள் பால் கேன்களில் அடைக்கப்பட்டு ஒரு மசூதிக்குக்கொண்டு செல்லப்பட்டன.
பின்னர் அங்கிருந்து அந்த வெடி குண்டுகளை ஒரு காரில் ஏற்றித்தான் காஷ்மீர் சட்டசபை வளாகத்தில்தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தினர்.
நான்தான் அந்த வெடி குண்டுகளைத் தயாரித்தேன் என்று பிர்தோஸ் அகாத் ஷா போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்தக் கார் குண்டுத் தாக்குதலில் 38 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Thursday, November 22, 2001, 5:30 [IST]