7 பஸ் ஊழியர் சங்கங்கள் ஸ்டிரைக்கிலிருந்து வாபஸ்
சென்னை:
போக்குவரத்துத் தொழிலாளர்களின் கூட்டுப் போராட்டக் குழுவில் இருந்து 7 தொழிற்சங்கங்கள் விலகுவதாகஅறிவித்துள்ளதையடுத்து நாளை நடைபெறுவதாக உள்ள பொது வேலை நிறுத்தத்தில் அவை பங்கேற்காது என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
போனஸ் பிரச்சனையில் சி.ஐ.டி.யு. செயலாளர் செளந்திரராஜன் தலைமையில் அதிமுகவின் அண்ணா தொழிலாளர்சங்கம் தவிர மற்ற அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒன்றாக இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன.
இந்தச் சங்கங்கள் அனைத்தும் நாளை (வெள்ளிக்கிழமை) பொது வேலை நிறுத்ததில் ஈடுபடப் போவதாகஅறிவித்துள்ளன.
இந்நிலையில் இந்தப் போராட்டத்தை பிசுபிசுக்கச் செய்வதற்காக போக்குவரத்துத் துறை அமைச்சர் நயினார்நாகேந்திரன் மற்றும் அண்ணா தொழிலாளர் சங்க செயலாளர் மலைச்சாமி எம்.பி. ஆகியோர் தலைமையில் பலதொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதன் விளைவாக த.மா.கா., ஹெச்.எம்.எஸ்., திராவிடர் கழகம், ஐ.என்.டி.யு.சி., புதிய நீதிக்கட்சி மற்றும் அண்ணாதொழிலாளர் சங்கம் உள்பட ஏழு சங்கங்கள் அரசுக்கு ஆதரவாகப் போராட்டக் குழுவில் இருந்து விலகுவதாகஅறிவித்துள்ளன.
இந்தச் சங்கங்கள் நாளை நடைபெறவுள்ள பொது வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ளாது என்றும், தங்கள்குழவின் தலைவராக அண்ணா தொழிலாளர் சங்க செயலாளர் மலைச்சாமியை ஏற்றுக் கொள்வதாகவும்அறிவித்துள்ளன.
அரசின் நிதிநிலைமையைக்ப புரிந்துகொண்டு அரசுக்கு ஒத்துழைக்குமாறும், போக்குவரத்துப் பிரச்சனைகள்தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாகவும் அமைச்சர் நயினார் நாகேந்திரன் உறுதியளித்துள்ளார்என்று இந்த ஏழு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications