For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரையில் தொடர் மழை: வீடு இடிந்து விழுந்து 3 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வீடு இடிந்து விழுந்து பிறந்து 40 நாளே ஆன கைக்குழந்தைஉள்பட 3 பேர் பலியானார்கள்.

மதுரையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில் மானகிரி நடுத்தெருவைச் சேர்ந்தகக்கப்பன் என்பவரது வீடு நேற்று இரவு (வியாழக்கிழமை) இடிந்து விழுந்தது.

அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கக்கப்பனின் மனைவி, அவரது மகள் கன்னீஸ்வரி மற்றும்கன்னீஸ்வரியின் 40 நாள் கைக்குழந்தை ஆகிய 3 பேர் இடிபாடுகளில் சிக்கிப் பலியானார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில்ஈடுபட்டனர். ஆனால் 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகுதான் இறந்தவர்களின் உடலை மீட்க முடிந்தது.

இந்தத் துயரச் சம்பவம் அந்தப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X