எங்களுக்கு ஒன்னுமே தெரியாது: மாறன், பாலு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை அடித்து இழுத்துச் சென்று கைது செய்த விவகாரத்தில் தொடர்புடைய 3 போலீஸ்அதிகாரிகளையும் மத்திய அரசுப் பதவிக்கு மாற்ற எங்கள் செல்வாக்கு எதையும் பயன்படுத்தவில்லை எனஅமைச்சர் முரசொலி மாறனும், டி.ஆர். பாலுவும் கூறியுள்ளனர்.
மாநகர கவல்துறை கமிஷ்னர் முத்துக் கருப்பன், இணை கமிஷ்னர் ஜார்ஜ், துணை கமிஷ்னர் கிருஸ்டோபர் நெல்சன்ஆகியோரை மத்திய அரசுப் பணிக்கு அனுப்பக் கோரி மத்திய அரசு விடுத்த கோரிக்கையை மாநில அரசுகண்டுகொள்ளவில்லை.
தங்கள் மாற்றும் திட்டத்தை எதிர்த்து இந்த அதிகாரிகள் மத்திய தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில்,மத்திய அமைச்சர்கள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி தங்களை இடம் மாற்ற முயல்வாதக் கூறியிருந்தனர்.
இந்த விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக மாறனுக்கும் பாலுவுக்கும் தீர்ப்பாயம் நோட்டீஸ்அனுப்பியது.
இந்த நோட்டீசுக்கு பதிலளித்து மாறனும் பாலுவும் தாக்கல் செய்த மனுவில், இந்த விவகாரத்தில் எங்கள்செல்வாக்கு எதையும் பயன்படுத்தவில்லை. இது தொடர்பாக பத்திரிக்கைகளில் தான் செய்தி வந்தது.பத்திரிக்கைகளில் பார்த்துத் தான் விபரம் அறிந்தோம்.
அதிகாரிகளின் குற்றச்சாட்டுகள் தவறானவை, வேண்டுமென்றே இந்த விவகாரத்தில் எஙகளை இழுக்கின்றனர்.இது பழிவாங்கும் நடவடிக்கை. எனவே, இந்த வழக்கிலிருந்து எங்கள் பெயரை நீக்க வேண்டும்.
இவ்வாறு இருவரும் தங்கள் மனுவில் கூறியுள்ளனர்.
மத்திய அரசு மீண்டும் கடிதம்:
இந் நிலையில் இந்த அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்கு அனுப்ப முடியுமா முடியாதா எனக் கேட்டு தமிழகஅரசுக்கு மத்திய அரசு மீண்டும் அனுப்பியுள்ளது.
இந்தக் கடிதம் கடந்த 23ம் தேதியே மாநில அரசுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக மத்திய நிர்வாகத் தீர்பாயத்தில்மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications