ரயிலில் வந்த 80 சந்தனக் கட்டைகள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த ரயிலில் கடத்தி வரப்பட்ட 80 சந்தனக் கட்டைகளை பெரம்பலூர் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா நகரிலிருந்து ஒரு ரயில் திருச்சி வந்தது. இந்த ரயில் பெரம்பலூர் ரயில் நிலையத்தில் நின்றபோதுரயில் பெட்டியை போலீஸார் சோதனை செய்தனர். அப்போது ஒரு பெட்டியில் 80சந்தனக் கட்டைகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த சந்தனக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த சந்தனக் கட்டைகளை யார் கடத்தி வந்தது என்பதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications