கல்வீச்சு: 4 பஸ்கள் சேதம்
திண்டுக்கல்:
திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரியில் பஸ்கள் மீது கல்வீச்சு நடந்தது.
இன்று நடந்த பந்த் குறித்து மாநில காவல்துறை டிஜிபி நெய்ல்வால் கூறுகையில்,
மாநிலம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல இயங்கின. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள்மூடப்படவில்லை.
பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்த ஒரு தொழிற்சங்கமான சி.ஐ.டி.யுவிற்குச் சொந்தமான ஆட்டோக்கள் மட்டும்அவ்வளவாக ஓடவில்லை.
மாநிலம் முழுவதிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எந்தவித அசம்பாவிதம் மாநிலத்தில்நடைபெறவில்லை. கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இரு இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சுநடந்துள்ளது.
இதில் நான்கு பஸ்களின் கண்ணாடிகள் உடைந்துள்ளன. வேறு அசம்பாவித சம்பவம் ஏதும் நடைபெறவில்லை.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டுவிடுவர். மாநிலம் முழுவதிலும் 70 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்தைத் தடை செய்ய யல்பவர்கள்உடனடியாக கைது செய்யப்படுவர் என்றார் அவர்.
இதற்கிடையே, கோவையில் சி.ஐ.டி.யூ அமைப்பைச் சேர்ந்த பத்மநாபன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவை மற்றும்திருப்பூரில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளனர். அங்கு தொழிற்சாலைகள்இயங்கவில்லை.
இதுவரை 5000 தொழிலாளர்கள் மட்டுமே அரசு கொடுத்துள்ள 8.33 சதவீத போனஸைப் பெற்றுக் கொண்டுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications