தமிழக கோர்ட்களில் 10 லட்சம் வழக்குகள் தேக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் கோர்ட்களில் தேங்கிக் கிடக்கும் 10 லட்சம் வழக்குகளைத் தீர்க்க 30 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளனஎன்-று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் கூறினார்.
திருச்சியில் விரைவு நீதிமன்றத்தைத் துவக்கி வைத்-துப் பேசிய அவர் கூறுகையில், கோர்ட்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளைவிரைவாக தீர்ப்பதற்காகவே விரைவு நீதிமன்றங்கள் துவக்கப்பட்டு வருகின்றன.
தமிழக கோர்ட்களில் மொத்தம் 10 லட்சம் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. இவற்றைத் தீர்ப்பதற்காக 30 விரைவு நீதிமன்றங்கள்அமைக்கப்படவுள்ளன. இதுவரை 11 நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு விட்டன. இன்னும் 19 நீதிமன்றங்கள் விரைவில்அமைக்கப்படும்.
குற்றவியல் வழக்குகள் தவிர சிவில் வழக்குகளும் இங்கு விசா-ரிக்கப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications