ரேஷன் கடைகளில் ஞாயிறு வேலை நாள்: அரசு அறிவிப்புக்கு நீதிமன்றம் தடை
சென்னை:
ரேஷன் கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வேலை நாள் என்று அறிவித்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்துசென்னை உயர் நீதிமன்றம் நேற்று (திங்கள்கிழமை) உத்தரவிட்டது.
பெரும்பாலானவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறையில் இருப்பார்கள் என்பதால் தமிழ்நாடு நுகர்பொருள்வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகள் ஞாயிற்றுக்கிழமை இயங்கும். அதற்குப் பதிலாகவெள்ளிக்கிழமை அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதை எதிர்த்து நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இதுகுறித்து அவர்கள் தாக்கல் செய்த மனுவில், எங்கள் கருத்தைக் கேட்காமல், அரசு தன்னிச்சையாகஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் கடைகள் இயங்கும் என்று அறிவித்துள்ளது. எனவே இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிமன்றம், கடந்த செப்டம்பர் மாதமே இதற்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.இந்நிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லாதன்னுடைய தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
தொழிற்சாலைகள் சட்டப்படி தொழிலாளர்களின் கருத்தைக் கேட்ட பிறகுதான் இதுபோன்ற உத்தரவை பிறப்பிக்கவேண்டும்.
ஆனால் அரசு தொழிலாளர்களின் கருத்தைக் கேட்காமல் தன்னிச்சையாக இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.எனவே அரசு உத்தரவை ரத்து செய்கிறேன் என்று தீர்ப்பளித்தார் நீதிபதி கலிபுல்லா.












Click it and Unblock the Notifications