அமெரிக்க குண்டு வீச்சிலிருந்து தப்பினார் முல்லா ஒமர்
இஸ்லாமாபாத்:
தலிபான் தலைவர் முல்லா ஒமர் மற்றும் அல்-காய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர்கள் பதுங்கியுள்ளஇடங்களின் மீது அமெரிக்கா விமானங்கள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஆனால் குண்டு வீச்சிலிருந்துஒமர் தப்பி விட்டார்.
இந்தப் பகுதிகளில்தான் தலிபான் தலைவர் முல்லா ஒமர், அல்-காய் தா தலைவர்கள் மற்றும் பின் லேடனுக்குஉதவுவதாகக் கூறப்படும் வாபா என்ற இயக்கத்தின் தலைவர்கள் ஆகியோர் பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
எனவே இந்தப் பகுதிகளில் அமெரிக்கப் படை பயங்கரத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுகுறித்து அமெரிக்கபாதுகாப்புத் துறை அமைச்சர் டொனால்டு ரம்ஸ் பீல்ட கூறுகையில்,
பின் லேடனுக்கு உதவும் தலிபான், அல்-காய்தா இயக்கங்களின் முக்கியத் தலைவர்கள் உள்ள பகுதிகளின் மீதுதாக்குதல் நடத்தும்படி நேற்றே அமெரிக்கப்டைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது.
தற்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள இடங்களில் சில முக்கியத் தலைவர்கள் பலியாகி இருக்க வாய்ப்புள்ளதுஎன்றார்.
ஆனால் தலிபான் தலைவர் முல்லா ஒமர் அமெரிக்கத் தாக்குதலில் இருந்து தப்பிவிட்டார் என்றும் அவர் உயிருடன்,நலமாக இருக்கிறார் என்றும் பாகிஸ்தானுக்கான முன்னாள் தலிபான் தூதர் அப்துல் சலாம் சயீப் கூறினார்.
மேலும் பின் லேடன் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications