தமிழகத்தில் பஸ் கட்டணம் கடும் உயர்வு
சென்னை:
தமிழகத்தில் பஸ் கட்டணமும், மின்சாரக் கட்டணமும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தமிழக அரசு வேறு வழியின்றி இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
நகரஙகளில் இனி குறைந்தபட்ச பஸ் கட்டணம் ரூ. 2 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சக் கட்டணம் ரூ. 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
புறநகர்களுக்கான பஸ் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பஸ்களில் கி.மீட்டருக்கு 22 பைசாவாக இருக்கும் கட்டணம் 30 பைசாவாகஉயர்த்தப்பட்டுள்ளது.
சொகுசுப் பேருந்துகளில் ஒரு கி.மீட்டருக்கான கட்டணம் 25 பைசாவிலிருந்து 36 பைசாவாக உயர்த்தப்படுகிறது. அதிசொகுசுப் பேருந்துகளில் கி.மீக்கு 30பைசாவாக இருக்கும் கட்டணம் 42 பைசாவாக உயர்த்தப்படும்.
கட்டணங்கள் மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன
தனியார் பஸ்களில் கட்டணம் உயரும்:
அரசு பஸ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதையடுத்து தனியார் பஸ்களிலும், மினி பஸ்களிலும், ஆம்னி பஸ்களிலும் கட்டணம் கிடுகிடுவென உயர்த்தப்படும்.நெடுந்தொலைவு செல்லும் ஆம்னி பஸ்களில் அவர்கள் வைப்பது தான் கட்டணம் என்ற நிலை உள்ளதால் மிக பயங்கரமான கட்டண உயர்வு இருக்கும் என்றுதெரிகிறது.
மலைப் பாதைகளில் இயக்கப்படும் சாதாரண பஸ்களுக்கு ஒரு கி.மீக்கான கட்டணம் 23 பைசாவிலிருந்து 37 பைசாவாகஅதிகரிக்கப்பட்டுள்ளது.
மலைப் பாதை சொகுசு விரைவுப் பேருந்துகளில் ஒரு கிலோமீட்டருக்கான கட்டணம் 30 பைசாவிலிருந்து 42 பைசாஅதிகரிக்கப்பட்டுள்ளது. அதி விரைவு சொகுசுப் பேருந்துகளில் 35 பைசாவிலிருந்து 47 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications