எனக்கு எதுவும் தெரியாது: அமெரிக்க கப்பல் கேப்டன்
சென்னை:
சென்னை வானில் அமெரிக்க ஹெலிகாப்டர் பறந்தபோது தகவல் தொடர்பு இல்லாமல் போனதா என்பது பற்றிஎனக்கு எதுவும் தெரியாது என்று சென்னை வந்துள்ள அமெரிக்க கப்பலின் கேப்டன் ஜெப்ராய் பேக் கூறினார்.
சென்னை வான் பகுதியிலும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தைச் சுற்றியும் அமெரிக்க ஹெலிகாப்டர் பறந்துபெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றக் கூட்டத்திலும் இது எதிரொலித்தது. இந்தியப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ளஆபத்தாகும் இது என்று கூறி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
இதற்கிடையே, கப்பலின் கேப்டன் நிருபர்களிடம் கூறியதாவது:
எங்களுடைய ஹெலிகாப்டர் அத்துமீறிப் பறந்தது பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. சர்வதேச விமானப்போக்குவரத்து சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டுத்தான் எங்கள் ஹெலிகாப்டர் பறந்துள்ளது.
இது குறித்து ஏற்கனவே இந்திய அரசுக்கு விளக்கம் அளித்து விட்டோம். அமெரிக்க தூதரகத்திற்கும் இதுகுறித்துஅறிக்கை ஒன்றை நாங்கள் அனுப்பியுள்ளோம்.
மேலும் இதுகுறித்து யார், எப்போது பேச வேண்டும் என்று கூறினாலும் அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்,அதை வரவேற்கிறோம் என்றார் பேக்.












Click it and Unblock the Notifications