தேனி அருகே கஞ்சா கடத்திய 9 பேர் கைது
தேனி:
தமிழக- கேரள எல்லையில் கஞ்சா கடத்திய கூடலூரைச் சேர்ந்த 9 பேரைப் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில்ஆஜர் படுத்தினர்.
தேனி மாவட்டத்தில் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனையிட்ட போது, அதில் வந்த சிலர்தங்களது இடுப்பைச் சுற்றி பாலிதீன் பைகளைச் சுற்றிக் கட்டியிருப்பதை கண்டுபிடித்தனர்.
அந்தப் பைகளுக்குள் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அடுத்து அவர்களிடம் இருந்த கஞ்சாவைப் பறிமுதல்செய்த போலீசார், அவர்கள் 9 பேரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.1.5 லட்சம்என்று கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட 9 பேரும் தேனி அருகே உள்ள கூடலூரைச் சேர்ந்தவர்கள் ஆவர். பின்னர் அந்த 9 பேரும்பெரியகுளம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.