நாடாளுமன்றத்தில் பிரச்சனை வரும்
டெல்லி:
இந்திய மண்ணில் அமெரிக்க ஹெலிகாப்டர் உளவு பார்க்கும் வேலையில் ஈடுபட்டதை இடதுசாரிக் கட்சிகள் மிகக்கடுமையாகக் கண்டித்துள்ளன.
இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும்முடிவு செய்துள்ளன.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ராஜா சென்னையில் பேசுகையில்,
அமெரிக்க போர்க் கப்பல்களை இந்தியாவுக்குள் அனுமதிக்கும் பாரதீய ஜனதா அரசின செயலை நாங்கள் எதிர்த்துவந்தோம். இப்போது அவர்களால் உள்ளே அனுமதிக்கப்பட்ட அமெரிக்கப் போர்க் கப்பலில் இருந்தஹெலிகாப்டர் இந்திய அணு ஆராய்ச்சி மையங்களை சோதனையிட்டுள்ளது.
இது இந்திய பாதுகாப்புக்கே பெரும் தீங்கு விளைவிக்கும். இந்தியாவிடம் அமெரிக்கா அத்துமீறி நடந்துகொண்டுள்ளது. இதனால் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படலாம்.
எந்தப் பகுதியில் பறந்தோம், என்னென்ன செயல்களில் ஈடுபட்டோம் என்ற விவரத்தை வெளியில் சொல்லமுடியாது என்று போர்க் கப்பலின் கேப்டனும், மத்திய அரசும் கூறுகின்றன.
இதனால் பல சந்தேகங்கள் எழுகின்றன. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரச்சனையைக் கிளப்புவோம்என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளது.