மின் கட்டணம் கிடுகிடு உயர்வு
சென்னை:
மின்சாரக் கட்டணத்தையும் அதிமுக அரசு மிக அதிக அளவில் உயர்த்தியுள்ளது.
நிதி நெருக்கடியை காரணம் காட்டி இந்த கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வீட்டு உபயோகத்துக்கான மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. குறைந்தபட்சக் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 75பைசாவிலிருந்து 1 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அதிகபட்சக் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 3 ரூபாயில் இருந்து 4.50ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் பஸ் கட்டணமும் மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது தமிழக மக்களை பெரும் அதிர்ச்சியில்ஆழ்த்தியுள்ளது.
தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளுக்கு ஒருயூனிட்டுக்கான கட்டணம் 40 பைசா உயர்த்தப்படுகிறது.