நக்கீரன் நிருபர் மைசூர் சிறையில் அடைப்பு
சென்னை:
கொள்ளேகால் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியனை டிசம்பர் 5ம் தேதிவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் மைசூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சந்தனக் கடத்தல் வீரப்பனை ரகசியமாகச் சந்திக்கச் சென்றதாகக் கூறி கர்நாடக அதிரடிப்படை நக்கீரன் நிருபர்சிவசுப்ரமணியத்தைக் கைது செய்தது.
இந்த வழக்கில் தனது கணவருக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கோரி நிருபரின் மனைவி கொள்ளேகால்கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நடத்தப்பட்டு, இன்று (புதன்கிழமை) தீர்ப்புஅளிக்கப்பட இருக்கிறது.
இந்நிலையில் ஆயுதங்களை பதுக்கி வைத்தல், தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ்சிவசுப்ரமணியத்தின் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவரமுடியாதபடி சிக்கலான சட்டப்பபிரிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வீரப்பனை ரகசியமாகச் சந்திக்கச் சென்றதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நேற்று கொள்ளேகால்கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட சிவசுப்ரமணியனை, டிசம்பர் 5ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதிகோபாலகிருஷ்ணன் ராய் உத்ரவிட்டார்.
இதைத் தொடர்ந்து சிவசுப்ரமணியனை போலீசார் பாதுகாப்புடன் மைசூர் சிறைக்கு அழைத்துச் சென்றுஅடைத்தனர்.












Click it and Unblock the Notifications