For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வழக்கம் போல் 30ம் தேதியே அரசு ஊழியர்களுக்கு சம்பளம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அரசு ஊழியர்களுக்குத் திட்டமிட்டபடி இம்மாத இறுதியிலேயே சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

அரசின் நிதி நிலைமை மோசமாக இருப்பதால் இந்த ஆண்டு தீபாவளி போனஸ் வழங்குவதில் பெரும் சிக்கல்ஏற்பட்டது. போக்குவரத்துத் தொழிலாளர்கள், சிவில் சப்ளைஸ் ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள்ஆகியோருக்கு வெறும் 8.33 சதவீத போனஸே வழங்கப்பட்டது.

இதை எதிர்த்து பெரும் போராட்டங்கள் நடந்து தற்போதுதான் ஓய்ந்துள்ளன.

இந்த நிலையில் அரசிடம் பண நெருக்கடி இருப்பதால் இந்த மாதத்திற்கான சம்பளம் வழக்கம் போல 1ம் தேதியேகிடைக்காது என்றும், ஒரு வாரத்திற்கும் மேல் தாமதம் ஆகலாம் என்றும் கூறப்பட்டது.

இதனால் அரசு ஊழியர்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது. சம்பளத்திற்கே திண்டாட்டம் என்றால் நமதுவேலையாவது நிலைக்குமா என்ற அச்சம் ஏற்பட்டது.

அவர்களது பீதியை அதிகப்படுத்தும் வகையில், படிகளில் வெட்டு, சலுகைகளில் வெட்டு, ஆட்குறைப்பு, விருப்பஓய்வுத் திட்டம் என பல நடவடிக்கைகளை அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்களிடையே பெரும்அதிருப்தியும், குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சரியான தேதியில் சம்பளம் வராவிட்டால் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவது என பலஅரசு ஊழியர் சங்கங்கள் முடிவு செய்திருந்தன. இது அரசின் காதுக்கும் போயுள்ளது.

இதையடுத்து சில உயர் அதிகாரிகள், அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்தினால் அவர்கள் வேலை நிறுத்தத்தில்ஈடுபடும் வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் அது அரசு நிர்வாகத்தையே ஸ்தம்பிக்க வைத்து விடும்.

எனவே சம்பளத்தை சரியான தேதியில் கொடுத்து விடுவதே நல்லது என்று அரசு முடிவெடுத்துள்ளதாகத்தெரிகிறது. மேலும், மத்திய அரசிடம் இருந்து வந்துள்ள நிதியை சம்பளம் கொடுக்க பயன்படுத்துமாறும் அறிவுரைகூறப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த மாத சம்பளம் உரிய தேதியில் வழக்கம் போல வழங்கப்படும் எனத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X