புதுக்கோட்டை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை ரயில்நிலையத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக தமிழ்நாடு விடுதலைப்படைஅமைப்பினர் மிரட்டல் விடுத்துள்ளனர்.
"சிறையிலிருக்கும் விடுதலைப்படையினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். சந்தன வீரப்பனைப் பிடிக்ககாட்டுக்குள் அனுப்பட்டுள்ள அதிரடிப்படியை உடனே வாபஸ் வாங்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லைஎன்றால் புதுக்கோட்டை ரயில்நிலையத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்த்து விடுவோம்" என்று கூறி புதுக்கோட்டைரயில்வே ஸ்டேஷன் மாஸ்டருக்கு தமிழ்நாடு விடுதலைப் படையினரிடம் இருந்து நேற்று (செவ்வாய்க்கிழமை)ஒரு மிரட்டல் கடிதம் வந்தது.
தமிழ்நாடு விடுதலைப் படை அரியலூர் என்ற முகவரியுடன் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதம், திருப்பூரிலிருந்துபோஸ்ட் செய்யப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் அவர்கள் மேலும் கூறியிருப்பதாவது,
எக்ஸ்பிரஸ் ரயில்களில் இன்னும் 75 நாட்களில் சக்திவாய்ந்த குண்டுகள் 10 இடங்களில் வெடிக்கும். மேலும்புதுக்கோட்டை ஸ்டேஷன் மாஸ்டரின் தலை துண்டிக்கப்படும்.
போலீஸ் விழிப்புடன் இருந்தாலும் இந்தச் சம்பவம் திட்டமிட்டபடி நடந்தே தீரும். எனவே உடனடியாக எங்கள்கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
இந்த மர்மக் கடிதம் வந்ததையடுத்து ரயில்வே தண்டவாளங்களைக் கண்காணிக்க திருச்சியிலிருந்து டிராலிகள்வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும் ரயில்வே ஸ்டேஷனைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.ஸ்டேஷன் மாஸ்டருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications