டிசம்பர் 6: தமிழகத்தில் தீவிர பாதுகாப்பு
சென்னை:
பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளான டிசம்பர் 6ம் தேதி நெருங்கி வருவரையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளான டிசம்பர் 6ம் தேதி நெருங்குவதையடுத்து, அசம்பாவிதம்எதுவும் ஏற்படாமல் தடுக்க தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களில் போலீசார் தீவிர பாதுகாப்புப் பணிகளைமேற்கொண்டுள்ளனர்.
சென்னையில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகர் போலீஸ் கமிஷனர்முத்துக்கருப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னையில் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்எடுக்கப்பட்டுள்ளன. பதட்டம் நிறைந்த பகுதிகள் கண்டறியப்பட்டு, அந்தப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் மற்றும் எக்மோர் ரயில் நிலையங்களில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.அனைத்து ரயில்களும் கடுமையாகச் சோதிக்கப்படும்.
மேலும் பொதுமக்களின் கருத்துக்களை அறியவும், தீய சக்திகளின் நதாசவேலைக்கான திட்டங்கள் குறித்துபோலீசுக்குத் தெரியப் படுத்துவதற்காகவும், பொது இடங்கள், கோயில்கள், தியேட்டர்கள் ஆகிய பொதுமக்கள்கூடும் இடங்களில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் யாரும் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிசதித்திட்டங்களில் ஈடுபடுவது போலத் தெரிந்தால் இந்தப் புகார் பெட்டிகளில் தங்களது புகார்களை எழுதிப்போடலாம் என்றார் முத்துக்கருப்பன்.












Click it and Unblock the Notifications