கல்லூரி மாணவர்களும் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
படிப்புக் கட்டண உயர்வைக் கண்டித்தும், பஸ்-மின் கட்டண உயர்வுகளைக் கண்டித்தும் தமிழக கல்லூரிமாணவர்கள் இன்று (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோயம்புத்தூர்-மருதமலை அருகே உள்ள சட்டக் கல்லூரியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி மாணவர்களுக்கான படிப்புக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று கோரி அவர்கள் அரசுக்கு எதிராககோஷங்கள் எழுப்பினார்கள்.
பஸ் மற்றும் மின் கட்டண உயர்வை உடனடியாக தமிழக அரசு வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கோரிஅவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதேபோல், தமிழகம் முழுவதிலும் பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications