கோபால் கைதானால் போராட்டம்: நிருபர்கள் முடிவு
சென்னை:
நக்கீரன் கோபாலை கர்நாடக போலீஸார் கைது செய்தால் மிகப் பெரிய போராட்டத்தை நடத்த சென்னைபத்திரிக்கையாளர்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
கோபால் கைது செய்யப்பட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்த சென்னை பத்திரிக்கையாளர்கள் முடிவுசெய்துள்ளார்கள்.
பத்திரிக்கையாளர்களின் சுதந்திரத்தில் தலையிடும் விதமாக கர்நாடக அரசு செயல்படுவதாக கருதும் அவர்கள்சிவசுப்ரமணியத்தை ஏமாற்றிக் கூட்டிச் சென்று கைது செய்து விட்டதாக கருதுகிறார்கள்.
இதன் மூலம் செய்தி சேகரிக்கும் பணியை சுதந்திரமாக செய்ய இனி அனைவரும் தயங்குவார்கள் என்றும்அவர்கள் கூறுகிறார்கள்.
கோபால் கைது செய்யப்படும் பட்சத்தில் தமிழகமே ஸ்தம்பிக்கும் வகையில் பெரிய அளவிலான போராட்டத்தில்ஈடுபட சென்னை பத்திரிக்கையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
தங்களுக்கு ஆதரவாக பிற மாவட்ட பத்திரிக்கையாளர் சங்கங்களையும் தொடர்பு கொண்டுள்ளனர் என்றுதெரிகிறது.












Click it and Unblock the Notifications