இலங்கை: தமிழர் வசிக்கும் பகுதிகளில் இன்று பந்த்
கொழும்பு:
இலங்கையில் நேற்று தமிழர் கட்சி வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து, தமிழர்கள்வசிக்கும் பகுதிகளில் இன்று முழு அடைப்பு நடத்தப்படுகிறது.
இலங்கையில் வரும் டிசம்பர் 5ம் தேதி பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில்போட்டியிடும் தமிழர் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் நேற்று (புதன்கிழமை)பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோதுஅவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் இரண்டு த-மி-ழர்-கள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் அங்குள்ள -யாழ் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக் கூடத்தில் பணியாற்றுபவர்.
இந்தத் தாக்குதலுக்குக் காரணம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி)தான் என்று தமிழ் ஐக்கிய விடுதலைமுன்னணியினர்(டி.யு.எல்.எப்) குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தத் தாக்குதலில் டி.யு.எல்.எப். வேட்பாளர் மா-வை சேனாதிராஜா படுகாயம் அடைந்து மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்-கி-டை-யில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, அந்தக் குற்றச்சாட்டை மறுப்பதுடன் தாக்குதலுக்குக் கடும்கண்டனமும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து முன்னாள் தீவிரவாதியும், தற்போதைய வடக்குப் பகுதியின் வளர்ச்சிமற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கூறுகையில்,
நேற்று தமிழர் கட்சி வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை எங்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.மேலும் அவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கும் நாங்கள் ஆதரவளிக்கிறோம்.
மக்கள் அனைவரும் எங்கள் கட்சிக்கு ஆதரவாக இருக்கும் போது, அவர்கள் மீது தாக்குதல் நடத்தி வன்முறையைத்தூண்ட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்றார்.
இந்நிலையில் இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்குப் பகுதிகளாகிய யாழ்ப்பாணம், வவுனியா, பாடிகோலா,திரிகோணமலை ஆகிய இடங்களில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளன. சாலைகளில் வாகனங்கள்எதுவும் ஓடவில்லை. மேலும் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன.
டி.யு.எல்.எப். உள்ளிட்ட 4 முக்கியத் தமிழர் கட்சிகள் இந்த முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications