பால் விலை 50 பைசா உயருகிறது
சென்னை:
பால் விலையை உயர்த்த ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக லிட்டருக்கு 50 பைசா விலை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு, பால் விலையை அவ்வப்போது உயர்த்திக் கொள்ள கூட்டுறவு பால் கொள்முதல் கழகங்களுக்கு நேற்றுத் தான்அனுமதி அளித்துது. இதை உடனடியாக அமல்படுத்தி மக்கள் வயிற்றில் அடிக்க ஆவின் திட்டமிட்டுள்ளது.
ஆவின் நிறுவனம் தனது சரித்திலத்திலேயே வேறு எந்தத் திட்டத்தையாவது இவ்வளவு வேகமாக அமலாக்கியிருக்குமா என்பதுசந்தேகம் தான்.
நேற்று வந்த அரசின் உத்தரவையடுத்து முதல் கட்டமாக லிட்டருக்கு 50 பைசா அளவுக்கு ஆவின் பால் விலை உயர்த்தப்படும்என்று தெரிகிறது.
கொழுப்பு நீக்கப்பட்ட பால் தற்போது ரூ. 12.50 க்கு விற்கப்படுகிறது. அது இனிமேல் 13 ரூபாய்க்கு விற்கப்படும். கொழுப்புடன்கூடிய பால் தற்போது ரூ 13.50க்கு விற்கப்படுகிறது. அது இனிமேல் ரூ. 14 ஆக இருக்கும் என்று தெரிகிறது.
வரும் 1ம் தேதி முதலே இந்த விலை உயர்வு அமலுக்கு வரலாம்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவுக் கழகமான ஆவின் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. பலமுறைமக்கள் பணம் சுருட்டப்பட்டுள்ளது என்பது நினைவூட்டத்தக்கது.












Click it and Unblock the Notifications