கட்டண உயர்வு மூலம் அரசுக்கு ரூ.4,482 கோடி கூடுதல் வருவாய்
சென்னை:
பஸ்-மின் கட்டண உயர்வு உள்பட பல்வேறு விலையேற்றங்கள் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.4,482 கோடிஅளவுக்கு வருவாய் கிடைக்கும் என்று அரசு வட்டாரங்களில் கூறப்படுகிறது.
தமிழகத்தில் வரும் சனிக்கிழமை முதல் பஸ் கட்டணம், மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதவிர புதிதாக பல்வேறு கட்டண உயர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. வரி சீரமைப்பும்அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் கட்டண உயர்வு பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியிருந்தாலும் கூட இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்குரூ.4,482 கோடி அளவுக்கு வருவாய் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
பஸ் கட்டண உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,030 கோடி அளவுக்கு கூடுதல் வருவாய் கிடைக்குமாம்.அதேபோல மின்சார கட்டண உயர்வு மூலம் ஆண்டுக்கு ரூ.1,500 கோடி அளவுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் பொருள் விலை உயர்வு, பால் விலை உயர்வு, வரி சீரமைப்பு மூலம் மீதமுள்ள தொகை கூடுதலாககிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் இந்த கட்டண உயர்வுகள் அமலுக்கு வருகின்றன.












Click it and Unblock the Notifications