தமிழுக்காக ஒன்று சேர்ந்த திமுக, அதிமுக
டெல்லி:
வழக்கமாக ஒருவர் முகத்தை ஒருவர் கூட பார்த்துக் கொள்ளாத அதிமுக, திமுக எம்.பிக்கள் ராஜ்யசபாவில்தமிழுக்காக ஒன்றாக சேர்ந்தனர்.
அதிமுக எம்.பியும் நடிகருமான எஸ்.எஸ்.சந்திரன் நேற்று ஊட்டி ஹோமியோபதி கல்லூரி தொடர்பாககவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து தமிழில் பேசினார். எஸ்.எஸ். தமிழில் பேசுவதற்கு துணை ஜனாதிபதியும்ராஜ்யசபை தலைவருமான கிருஷ்ணகாந்த் ஆட்சேபம் தெரிவித்தார்.
கவனஈர்ப்புத் தீர்மானத்தை ஆங்கிலத்தில் தந்துள்ள சந்திரன் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த சந்திரன், நான் ஏற்கனவே இந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் ஆங்கில மொழியாகத்தைராஜ்யசபை செயலாளரிடம் கொடுத்துவிட்டேன். இதனால் நான் பேசுவதை மொழி பெயர்த்துத் தர வேண்டியதுஅவரது கடமை. எனவே, நான் தமிழில் பேச அனுமதிக்க வேண்டும் என்றார்.
அப்போது எழுந்த திமுக எம்.பியும் மத்திய அமைச்சருமான முரசொலி மாறன், அவரை தமிழில் பேச அனுமதிக்கவேண்டும் என்றார். உடனே பிற திமுக எம்.பிக்களும் எழுந்து எஸ்.எஸ். சந்திரனை தமிழில் பேச அனுமதிக்கக்கோரினர்.
எஸ்.எஸ்.சந்திரன் சார்ந்துள்ள அதிமுகவின் எம்.பிக்களும் தமிழில் பேச அனுமதி வழங்க வேண்டும் என்றுவற்புறுத்தினர்.
அப்போது எழுந்த தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பியும் மத்திய அமைச்சருமான ஓ.ராஜகோபாலும் சந்திரனைதமிழில் பேச அனுமதிக்கலாம் என்றார்.
சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த எம்.பியான அலுவாலியாவும் தமிழுக்கு ஆதரவாகப் பேசினார்.
இதையடுத்து எஸ்.எஸ். சந்திரனை தமிழில் பேச கிருஷ்ணகாந்த் அனுமதித்தார்.
பின்னர் பேசிய சந்திரன் தனக்கும் தமிழுக்கும் ஆதரவாகப் பேசிய திமுக, பா.ஜ.க. எம்பிக்களுக்கும்அலுவாலியாவுக்கும் நன்றி தெரிவித்தார்.
துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த் ஆந்திராவைச் சேர்ந்தவர்.