ஆசிரியர் தேர்வில் முறைகேடு இல்லை: தம்பிதுரை
சென்னை:
பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டதில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என்று தமிழக கல்வித்துறைஅமைச்சர் தம்பிதுரை கூறினார்.
கடந்த மாதம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுகள் நடைபெற்றது. இந்தத் தேர்வில் எந்தவித முறைகேடும்நடக்கவில்லை என்றும் யாரும் இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் கல்வி அமைச்சர்தம்பிதுரை கூறினார்.
இதுகுறித்து இன்று(வியாழக்கிழமை) சென்னையில் அவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது,
கடந்த மாதம் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுகளின் விடைத் தாள்கள் திருத்தும் பணிமுடிவடைந்துவிட்டது. அடுத்த மாதம் தேர்வு செய்யப்பட்டுள்ள 1,100 ஆசிரியர்களும் பணி நியமனம்செய்யப்படுவார்கள்.
மொத்தம் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் இந்தத் தேர்வை எழுதினார்கள். தேர்வு வெளிப்படையாகவும் சிறப்பானமுறையிலும் நடைபெற்றது. விடைத் தாள்கள் அனைத்தும் கம்ப்யூட்டர் மூலம் திருத்தி முடிக்கப்பட்டுள்ளது.
எனவே தேர்வு எழுதியவர்கள் தங்களின் மதிப்பெண்களில் எந்த முறைகேடும் நடந்திருக்க வாய்ப்பில்லைஎன்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
மேலும் 3 ஆண்டுகளுக்கு மேல் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு மொத்த மதிப்பெண்களில் 1 மதிப்பெண்போனசாகவும், 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ளவர்களுக்கு 3 மதிப்பெண்கள் போனசாகவும்வழங்கப்படுகிறது. என்.சி.சி. போன்றவற்றில் பங்கெடுத் சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு 2 மதிப்பெண்கள்போனசாக வழங்கப்படுகிறது.
எனவே அதிகபட்சமாக 105 மதிப்பெண்கள் வரை ஒருவர் பெற வாய்ப்பிருக்கிறது. இந்த மதிப்பெண்களும்கம்யூட்டர் மூலமாகவே அளிக்கப்படுகின்றன.
மேலும் வயது வந்தவர்கள் யாரும் வேலை கிடைக்கமால் இருக்கக் கூடாது என்பதற்காக, வயது வரம்பும் 37 ஆகஉயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு சீரிய முறையில் தேர்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே இடைத்தரகர்களை நம்பி யாரும்பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.
அடுத்த ஆண்டு முதல் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை விடைத் தாள்களைத் திருத்துவதற்கு வேறு பள்ளிஆசிரியர்களை நியமிக்க அரசு முடிவுசெய்துள்ளது.
இவ்வாறு தம்பிதுரை கூறினார்.












Click it and Unblock the Notifications