ரவுடி வீரமணி ஜாமீன் கோரி மனு
சென்னை:
ரவுடியை கடத்திச் சென்று சரமாரியாக வெட்டிய வழக்கில் சென்னை அயோத்திக்குப்பம் தாதா வீரமணி தாக்கல்செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை டிசம்பர் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்பாக சாட்சி சொல்ல வந்த சண்முகம் என்ற ரவுடியைஅயோத்திக்குப்பம் வீரமணி தலைமையிலான ரவுடிக் கும்பல் கடத்திச் சென்று சரமாரியாக அரிவாள்களால்வெட்டியது. இதில் படுகாயமடைந்த சண்முகம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக வீரமணியை போலீஸார் தேடி வந்தனர். ஆனால் அவர் சிறிது நாட்கள் தலைமறைவாகஇருந்து விட்டு திருவாரூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். தற்போது ஜாமீனில் விடுதலை செய்யக் கோரிவீரமணியும், அவரது கூட்டாளியும் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி அசோக் குமார் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுக்களைவிசாரித்த நீதிபதி அசோக்குமாரிடம், போலீஸ் தரப்பில் பதில் கூற கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்துவரும் 3ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications