நிதி சீரமைப்புத் திட்டங்கள்: மக்களிடம் விளக்க அதிமுக முடிவு
சென்னை:
தமிழக அரசின் நிதி நிலை சீரமைப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்குவதற்காக மாநிலம் முழுவதிலும்பொதுக்கூட்டம் நடத்த அதிமுக முடிவு செய்துள்ளது.
கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஓ.எஸ்.மணியன் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:
கடந்த திமுக ஆட்சியில் சீர்கேடான நிலைக்குச் சென்று விட்ட தமிழக நிதி நிலையை சமாளிக்க அதிமுக அரசுபல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தத் திட்டங்கள் குறித்து மக்களிடம் விளக்க கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதன் பொருட்டு மாநிலம் முழுவதிலும் டிசம்பர் 3 ம் தேதி முதல் 14ம் தேதி வரை விளக்கப் பொதுக்கூட்டங்கள்நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டங்களில் முன்னாள் எம்.எல்.ஏ. கா.சுப்பு, முன்னாள் சபாநாயகர் சீனிவாசன் ஆகியோர் பேசுவார்கள்.இந்தக் கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட பகுதி அதிமுக நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஒப்புதலின் பேரில் இந்த அறிக்கை வெளியிடப்படுவதாக மணியன்தெரிவித்துள்ளார்.