காண்டஹாருக்குள் நுழைந்தது நார்த்தர்ன் அலையன்ஸ்?
காபூல்:
ஆப்கானிஸ்தானின் தெற்கு நகரமான காண்டஹாருக்குள்ளும் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் நுழைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே விமானங்களின் மூலம் காண்டஹார் விமான நிலையம் அருகே இறங்கிய அமெரிக்க மெரைன்வீரர்கள், விமான நிலையத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பின்னர் அவர்களும் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினருக்குத் துணை நின்று காண்டஹார் நகரைப் பிடிக்கும்பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் ஆப்கானிஸ்தானில் காண்டஹார் நகரை மட்டுமே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான்கள்,அந்நகரைத் தக்கவைத்துக் கொள்வதற்காக கடுமையாகப் போராடி வருகின்றனர்.
காண்டஹாரைச் சுற்றியுள்ள பகுதிகளில் தலிபான்களுக்கும் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினருக்கும் கடுமையானதுப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
இதற்கிடையே காண்டஹார் நகரின் கிழக்குப் பகுதிக்குள் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் ஊடுருவி விட்டதாகஅதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவித்தன.
ஆனால் நிருபர்கள் யாரும் காண்டஹாருக்குள் இன்னும் நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இதை வைத்தேஇன்னும் காண்டஹாருக்குள் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் நுழையவில்லை என்று தெரிந்து கொள்ளலாம்என்றும் வேறு சில தகவல்கள் தெரிவித்தன.
அமெரிக்க விமானங்கள் குண்டு மழை
இதற்கிடையே காண்டஹார் நகரில் உள்ள தலிபான் நிலைகளின் மேல் அமெரிக்க விமானங்கள் தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வருகின்றன.
நேற்று (வியாழக்கிழமை) மட்டும் எட்டு தலிபான் நிலைகள் மீது குண்டுகள் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அல்-காய்தா தலைவர்கள் பதுங்கியிருப்பதாகக் கூறப்படும் பதுங்கு குழிகளிலும் குகைப் பகுதிகளிலும்தான்முக்கியமாகக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.
சுமார் 120 முறை நேற்று மட்டும் அமெரிக்க விமானங்களால் காண்ஹார் நகரம் தாக்கப்பட்டுள்ளது.
அல்-காய்தா மற்றும் தலிபான் இயக்கத் தலைவர்களைக் குண்டு வீசுவதன் மூலம் குகைகளை விட்டுவெளியேற்றுவது பெரும் பாடாகத்தான் உள்ளது என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார்.