கடலூர் அருகே மீண்டும் விஷச் சாராயம்: 2 பெண்கள் உள்பட 13 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

கடலூர் அருகே நேற்று (வியாழக்கிழமை) இரவு விஷச் சாராயம் குடித்து 2 பெண்கள் உள்பட 13 பேர்உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள நத்தம் கிராமத்தில் நேற்றிரவு கூலித் தொழிலாளர்கள் சிலர் ஒரு மதுக்கடையில் சாராயம் வாங்கிக் குடித்துள்ளனர்.

அந்தச் சாராயத்தைக் குடித்த சிறிது நேரத்திலேயே ஜோதி என்பவர் சுருண்டு விழுந்து இறந்தார். மற்றவர்கள்மயங்கி விழுந்தனர்.

அவர்கள் அனைவரும் உடனடியாக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சைபலனளிக்காமல் ஒரு பெண் உள்பட ஒன்பது பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

பண்ருட்டி மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதி இல்லாத காரணத்தால், இச்சம்பவத்தில் மயங்கிய மற்ற 45பேர் கடலூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்நிலையில் இன்று காலை மேலும் மூன்று பேர் பலியாகினர். இதையடுத்து இச்சம்பவத்தில் இறந்தவர்களின்எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 25பேரின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று தெரிகிறது.

இதற்கிடையே இந்த விஷச் சாராயத்தை விற்ற மதுக் கடைக்காரர் தப்பி ஓடிவிட்டார். அவரைப் போலீசார் தேடிவருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+