For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய சாப்ட்வேர் நிபுணர்களை அழைக்கிறது சீனா

By Staff
Google Oneindia Tamil News

பீஜிங்:

அமெரிக்கப் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால், அங்கு சென்ற இந்திய சாப்ட்வேர் வல்லுநர்கள்தற்போது சீனாவுக்குச் செல்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த செப்டம்பர் 11ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து, ஏற்கனவே சற்றுதொய்வில் இருந்த சாப்ட்வேர் நிறுவனங்கள் மேலும் பின்னடைவைச் சந்தித்தன.

இதையடுத்து அமெரிக்காவில் இருந்த சீன சாப்ட்வேர் நிறுவனங்களான லெஜெண்ட், பவுண்டர் மற்றும் ஹூவேபோன்ற நிறுவனங்கள் மீண்டும் சீனாவுக்கு மாற்றப்பட்டன. இந்த நிறுவனங்கள் தற்போது இந்திய சாப்ட்வேர்வல்லுநர்களை பணிக்கு அழைப்பதில் ஆர்வம் காட்டிவருகின்றன.

மேலும் சீனாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களான நோகியா, சீமென்ஸ் மற்றும் பிராக்டர் அன்டு கேம்பிள்போன்ற நிறுவனங்களில் இந்திய சாப்ட்வேர் இன்ஜினியர்களுக்கு வேலை கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அங்குள்ள இந்தியத் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் தினேஷ் பட்நாயக் கூறுகையில்,

சீனாவில் வேலைபார்க்கும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் சீன அரசுதற்போது தங்கள் நாட்டுக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் விதிகளையும் கட்டுப்பாடுகளையும்தளர்த்தியுள்ளதால், இந்தியர்களுக்கு இங்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.

வரும் டிசம்பர் 11ம் தேதிக்குப் பிறகு உலக வர்த்தகக் கழகத்தின் முழுநேர உறுப்பினராக சீனா மாறிய பிறகுஇந்தியர்கள் இங்கு வேலை வாங்குவது மேலும் எளிதாகும் என்றார்.

இதற்கிடையில் சீனாவின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், நிர்வாகம்மற்றும் தொழில் நுட்பத்தில் வல்லுநர்களாக உள்ளவர்களும், சீனாவில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளவர்களும்விசா இல்லாமலே நிரந்தரமாகத் தங்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X