சாராயத்தில் மெத்தனால் அதிகம்: டாக்டர் அறிக்கை
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
சாராயத்தில் மெத்தனால் அதிகம் கலக்கப்பட்டிருந்ததால்தான் இத்தனை பேரும் இறந்துள்ளதாக சிகிச்சை அளித்தடாக்டர் கூறியுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட மருத்துவ சேவைத்துறை இணை இயக்குநர் டாக்டர் சிவகாமி கூறுகையில்,
சாராயம் குடித்ததால் மயங்கி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டவர்களைச் சோதித்துப் பார்த்தோம்.
அப்போது அவர்கள் குடித்த சாராயத்தில் மெத்தனால் என்னும் வேதிப் பொருள் அளவுக்கு அதிகமாக இருந்ததுதெரிய வந்தது.
அளவுக்கு அதிகமாக சேர்க்கப்ட்ட இந்த மெத்தனால்தான் இவ்வளவு உயிர்களையும் எடுத்துள்ளது என்று கூறினார்டாக்டர் சிவகாமி.
மேலும், மயக்கமாகி அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 54 பேருடைய நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும்,இருப்பினும் இவர்களில் சிலருடைய நிலை ஓரளவு தேறி வருவதாகவும் டாக்டர் சிவகாமி கூறினார்.












Click it and Unblock the Notifications