நக்கீரன் நிருபரைப் பார்க்க அனுமதி கோரி மனைவி மனு
Subscribe to Oneindia Tamil
கொள்ளேகால்:
கர்நாடக போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள தனது கணவரும் நக்கீரன் நிருபருமான சிவசுப்பிரமணியனைப்பார்க்க அனுமதி அளிக்கக் கோரி சாம்ராஜ்நகர் கோர்ட்டில் அவரது மனைவி மனு தாக்கல் செய்துள்ளார்.
நக்கீரன் நிருபர் சிவசுப்ரமணியன் மீது சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் தொடர்பு, ஆயுதக் கடத்தல் உட்பட பலபிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கர்நாடக போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
போலீசார் இவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். டிசம்பர் 10ம் தேதி வரை இவரை போலீசார் தங்கள் காவலில்வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.
இவர் மீதான வழக்குகள் சாம்ராஜ்நகர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சிவசுப்ரமணியனின் மனைவி ஜெயந்தி, சாம்ராஜ்நகர் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், எனதுகணவரைப் பார்க்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications